செய்திகள்

சேலத்தில் தொழில் அதிபரிடம் கடன் வாங்கி தருவதாக ரூ.6.5 லட்சம் மோசடி

Published On 2018-11-21 12:32 GMT   |   Update On 2018-11-21 12:32 GMT
சேலத்தில் தொழில் அதிபரிடம் கடன் வாங்கி தருவதாககூறி ரூ.6.5 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
சேலம்:

கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் கிரிஷ் (வயது 45).

தொழில் அதிபரான இவரை சேலத்தை சேர்ந்த ஹரி என்பவர் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் வங்கி கடன் பெற்று தருவதாக கூறினார்.

அதற்கான ஆவணங்களை எடுத்து வரும் படி கூறிய ஹரி சேலம் ரெட்டியூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தான் தங்கி இருப்பதாகவும் கூறினார்.

இதனை நம்பிய கிரிஷ் சேலத்திற்கு வந்தார். அப்போது கடன் பெற்று தருவதற்காக கூறி கிரிஷிடம் ரூ. 6 லட்சத்து 47 ஆயிரத்தை ஹரி பெற்றார். ஆனால் அவர் சொன்ன படி கடன் வாங்கி கொடுக்கவில்லை.

மேலும் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்காமல் ஹரி இழுத்தடித்து வந்தார். இது குறித்து கிரிஷ் சூரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஹரி உள்பட 3 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News