செய்திகள்
புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- முதல்வர் அறிக்கை
கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். #GajaCyclone #Gaja
கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சில இடங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்ல என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள். புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள். புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.