செய்திகள்

கஜா புயல் எதிரொலி - சென்னையில் மிதமான மழை பரவலாக பெய்யும்

Published On 2018-11-15 04:03 GMT   |   Update On 2018-11-15 04:03 GMT
கஜா புயல் கரையை கடப்பதால் இன்று காலை சுமார் 11 மணியில் இருந்து சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மிதமான மழை பரவலாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #CycloneGaja #TNRains
சென்னை:

கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



சென்னைக்கு அருகே 370 கி.மீ., நாகைக்கு அருகே 370 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் கரையை கடப்பதன் எதிரொலியாக சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில்  இன்று காலை சுமார் 11 மணியில் இருந்து மிதமான மழை பரவலாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப இன்று அதிகாலை மத்திய சென்னை, தென் சென்னை வட சென்னைக்குட்பட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. காலை சுமார் 9 மணியில் இருந்து சில பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. #CycloneGaja #TNRains 
Tags:    

Similar News