செய்திகள்

மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பலி

Published On 2018-11-14 17:05 GMT   |   Update On 2018-11-14 17:05 GMT
மன்னார்குடி அருகே இன்று காலை இன்வென்டரை பழுது பார்த்த போது மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 62). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்.

இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் வீட்டில் இருந்த இன்வென்டரை சிங்கார வேலு பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பேட்டரியில் இருந்த மின்சாரம், சிங்காரவேலு மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் பற்றி மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சிங்கார வேலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News