செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் எலி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த காலிவரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் நந்தினி (வயது 20). இவர் எலி மருந்தை குடித்து விட்டார்.
தேன்கனிக்கோட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இவர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று மாலை 6.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.