செய்திகள்

சினிமா தியேட்டர் உரிமையாளர் வீட்டில் வைர நகைகள் திருட்டு

Published On 2018-11-14 00:34 GMT   |   Update On 2018-11-14 00:34 GMT
சினிமா தியேட்டர் உரிமையாளர் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் 10 கிலோ எடையுள்ள வெள்ளிப்பொருட்கள் திருட்டுப்போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடையாறு:

சென்னை மயிலாப்பூர் லஸ் அவென்யூ 3-வது தெருவை சேர்ந்தவர் ஷீலா பார்த்தசாரதி (வயது 49). சினிமா தியேட்டர் உரிமையாளர். குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த இவர் நேற்று முன்தினம் வீடு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் 10 கிலோ எடையுள்ள வெள்ளிப்பொருட்கள் திருட்டுப்போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஷீலா பார்த்தசாரதி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News