செய்திகள்

காரியாபட்டி அருகே விவசாயி எரித்துக் கொலை - மனைவி கைது

Published On 2018-11-13 11:33 GMT   |   Update On 2018-11-13 11:33 GMT
காரியாபட்டி அருகே விவசாயியை எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (55).

இன்று காலை காட்டுப்பகுயில் முட்புதற்களுக்கிடையில் வீரபத்திரன் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.

இதை பார்த்த அப்பகுதியினர் உடனே மல்லாங் கிணறு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீரபத்திரன் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வீரபத்திரனின் மனைவி மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தியதில் கணவரை கொலை செய்ததை மகாலட்சுமி ஒப்புக்கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவர் அடிக்கடி துன்புறுத்தியதால் கொலை செய்ததாக மகாலட்சுமி வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News