செய்திகள்

திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் பயணியிடம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-11-12 11:20 GMT   |   Update On 2018-11-12 11:20 GMT
திண்டுக்கல்லில் ஓடும் ரெயிலில் பயணியிடம் பணம்- நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குள்ளனம்பட்டி:

சென்னையைச் சேர்ந்தவர் முத்து நதியா (வயது 25). இவர் மதுரை செல்வதற்காக தனது சகோதரருடன் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவர் கைப்பை வைத்திருந்தார். அதில் 4 பவுன் நகை மற்றும் பணமும் வைத்திருந்தார்.

திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்த போது கைப்பையை பார்த்தார். அப்போது நகை மற்றும் பணம் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை மர்ம நபர் துணிகரமாக அபேஸ் செய்துள்ளார்.

இது குறித்து முத்து நதியா திண்டுக்கல் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News