செய்திகள்

தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழக விடுதியில் மதுரை மாணவர் தற்கொலை

Published On 2018-11-12 11:19 GMT   |   Update On 2018-11-12 11:19 GMT
தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

மதுரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் மாயன். இவரது மகன் ஹரீஸ் (வயது 19). இவர் தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முதலா மாண்டு படித்து வந்தார். ஹரீஸ் பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கியிருந்து படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் ஹரீசுடன் விடுதியில் தங்கியிருந்த நண்பர்கள் வெளியே சென்று விட்டனர்.

பிறகு இரவு 10 மணியளவில் அவர்கள் விடுதிக்கு திரும்பினர். அப்போது அவர்கள் தங்கியிருந்த அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு மின்விசிறியில் ஹரீஸ் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவர் ஹரீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் ஹரீஸ் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ராக்கிங் பிரச்சினை காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாஸ்திரா பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News