செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை முயற்சி

Published On 2018-11-03 06:14 GMT   |   Update On 2018-11-03 06:14 GMT
சென்னை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #chennaiairport #suicideattempt

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமானங்கள் புறப்பாடு பகுதியில் 2-வது தளத்தில் இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் குழந்தையை சேலையால் தனது உடலில் கட்டிக் கொண்டு 2-வது தளத்தில் குதிக்க முயன்றார். இதை பார்த்த விமான நிலைய ஊழியர்கள், பயணிகள் அப்பெண்ணை தடுத்து மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

அவர் வைத்திருந்த பையில் ஆதார் அட்டை இருந்தது. விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த மாரியம்மாள் என்பதும், தனது ஒரு வயது குழந்தையுடன் கடந்த 1-ந் தேதி மாலை முதல் விமான நிலையத்தில் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது.

அவரிடம் போலீசார் விசாரித்த போது கதறி அழுதார். பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மாரியம்மாளின் கணவர் அசோக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானதும், அதனால் மாரியம்மாள் கடும் மன அழுத்தத்தில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மாரியம்மாள், கைக்குழந்தையுடன் தேனாம்பேட்டையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

நெய்வேலியில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. #chennaiairport #suicideattempt

Tags:    

Similar News