செய்திகள்

நெல்லை அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-10-27 08:48 GMT   |   Update On 2018-10-27 08:48 GMT
நெல்லை அருகே போலீஸ் ஏட்டு வீட்டு பூட்டை உடைத்து ரூ.17 லட்சம் நகை-பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கை கொண்டானை அடுத்த துறையூரை சேர்ந்தவர் ஆசிர்வாதம் (வயது 65). ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு. இவரது மனைவி காஞ்சனா. கணவன்- மனைவி இருவரும் நேற்று காலை தங்களது வீட்டை பூட்டி விட்டு நெல்லை தாழையூத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் மீண்டும் நேற்று மாலையில் ஊருக்கு சென்றனர். அப்போது அவர்களது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் தங்க நகை, ரூ. 97 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசிர்வாதம் கங்கை கொண்டான் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தை மோப்பம் பிடித்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டு பூட்டை உடைத்து ரூ. 17 லட்சம் நகை-பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News