செய்திகள்

திருச்சி உறையூரில் நிதிநிறுவன பெண் ஊழியர் தற்கொலை

Published On 2018-10-24 16:38 GMT   |   Update On 2018-10-24 16:38 GMT
திருச்சி உறையூரில் நிதிநிறுவன பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:

திருச்சி உறையூர் செல்வம் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி தீபிகா (வயது32). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக தீபிகா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் உறையூர் போலீசார் விரைந்து சென்று தீபிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீபிகா தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News