செய்திகள்

பழனி-நத்தத்தில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பாதிப்பு

Published On 2018-10-23 09:58 GMT   |   Update On 2018-10-23 09:58 GMT
பழனி மற்றும் நத்தத்தில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழனி:

பழனி தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது52). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் பழனி தனியார் ஆஸ்பத்திரியில் சோதனை எடுத்தார். அப்போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்வாதம்பட்டியை சேர்ந்த ஒருவர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நத்தம் அருகில் உள்ள எரக்காபட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மனைவி பொன்னம்மாள் (19). கர்ப்பிணியான இவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News