செய்திகள் (Tamil News)

சின்மயி குற்றச்சாட்டு தொடர்பாக வைரமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- எச்.ராஜா

Published On 2018-10-23 07:57 GMT   |   Update On 2018-10-23 07:57 GMT
சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார். #BJP #HRaja #Vairamuthu
மதுரை:

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச்செயலாளர் எச்.ராஜா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் இடதுசாரி அரசும், மக்கள் விரோத சக்தியும் இந்துத்துவ விரோத சக்திகளும் ஒருங்கிணைந்து சபரிமலை புனிதத்தை கெடுத்து விட வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுகின்றன.

இது 6 மாதத்திற்கு முன்பு கேரளாவில் இரு பிரிவினர் ஒரு தேவாலயத்திற்கு உரிமை கொண்டாடினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பினர் பேரணி போராட்டம் நடத்தினர். உடனே பினராயி விஜயன் அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்தினால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். எனவே கால அவகாசம் வேண்டுமென கோரியது.


இதே நடைமுறையை சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு ஏன் பின்பற்றவில்லை? இந்துக்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றாமல் ஆபாசமான புகைப்படங்களை பதிவிட்ட ரெஹனா பாத்திமா என்பவர் கமாண்டோ உடையணிந்து சபரிமலை வரை சென்றுள்ளார். இது கேரள முதல்வரின் கீழ்த்தரமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

கேரள அரசை கண்டித்து வருகிற 30-ந்தேதி பா.ஜ.க. சார்பில் அய்யப்பன் நாமசங்கீர்த்த யாத்திரை நடக்கிறது. சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாய் ஆண்டாளை பழித்த வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #Vairamuthu #Chinmayi
Tags:    

Similar News