நெட்டப்பாக்கம் அருகே கடன் தொல்லையில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் தற்கொலை
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர்வேலு (வயது 54). இவர், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர், சிலரிடம் பணம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கதிர்வேல் திண்டாடி வந்தார்.
பணம் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் கதிர்வேல் விரக்தியில் இருந்து வந்தார்.
இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் நேற்று காலை பணிபுரிந்த குடிநீர்தேக்க தொட்டி அருகே உள்ள கட்டிடத்தில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட கதிர்வேலுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.