செய்திகள்

கடன் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி- 3 பேர் மீது வழக்கு

Published On 2018-10-19 18:29 GMT   |   Update On 2018-10-19 18:29 GMT
கடன் தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை:

நாகப்பட்டிணம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 63). தொழில் அதிபரான இவருக்கு வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக ரூ.2ம கோடி தேவைப்பட்டது.

இதற்காக மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வரும் அருந்ததி, கவுதம் ஆகியோரை அணுகினார். அவர்கள் கடன் தருவதாகவும், அதற்கு டாக்குமெண்ட் செலவுக்கு ரூ. 30 லட்சம் தர வேண்டுமெனவும் கூறினர். இதை நம்பிய வரதராஜனும் ரூ.30 லட்சத்தை 3 பேரிடமும் கொடுத்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வரதராஜனை தொடர்பு கொண்ட 3 பேரும் பணம் தயாராகி விட்டது. உடனே வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினர். இதனை நம்பி வரதராஜன் மதுரைக்கு வந்து ஒரு ஓட்டலில் தங்கினார். அங்கு வந்த 3 பேரும் ஒரு சூட்கேசை கொடுத்து அதில் ரூ. 1 கோடியே 40 லட்சம் இருப்பதாக கூறிவிட்டுச் சென்றனர். வரதராஜனும் பணத்தை இங்கு எண்ணினால் பாதுகாப்பு இருக்காது என்று கூறி சூட்கேசுடன் ஊருக்கு சென்று விட்டார்.

அங்கு சென்று சூட்கேசை திறந்து பார்த்தபோது ரூ.25 ஆயிரம் மட்டுமே இருந்தது. மேலும் பணக்கட்டுகள் போன்று காட்சியளிப்பதற்காக 3 பேரும் பணத்தை ஜெராக்ஸ் எடுத்து பேப்பர் கட்டுகளை வைத்திருந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வரதராஜன், 3 பேரையும் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் மோசடி குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News