செய்திகள்
மாதவரம் அருகே பெண் பலியான வழக்கில் லாரி டிரைவர் கைது
மாதவரம் அருகே பெண் பலியான வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
ஆவடி அழகர்சாமி தெருவை சேர்ந்தவர் இம்தியாஸ். இவரது மனைவி மோனிஷா. இவர்கள் மோட்டார் சைக்கிளில் மணலி நோக்கி சென்ற போது மாதவரத்தில் கண்டெய்னர் லாரி மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மோனிஷா பலியானார்.
இது குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் தப்பிய லாரி டிரைவரை தேடி வந்தனர். மாதவரம் ஜங்ஷனில் புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கண்டெய்னர் லாரியை கண்டு பிடித்தனர். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய ஊத்தங்கரையை சேர்ந்த டிரைவர் செல்வத்தை கைது செய்தனர்.