செய்திகள்

பென்னாகரம், பெரும்பாலை பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2018-10-15 16:56 GMT   |   Update On 2018-10-15 16:56 GMT
பென்னாகரம், பெரும்பாலை பகுதிகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20 மொபட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மொபட்டுகள் அடிக்கடி திருட்டு போனது. இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் பருவதனஅள்ளி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பென்னாகரம் அருகே உள்ள எட்டிக்குழி பகுதியை சேர்ந்த மஞ்சு (வயது 28), பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த முருகன்(28) என்பதும், பென்னாகரம், பெரும்பாலை, பாப்பாரப்பட்டி மற்றும் கர்நாடக மாநிலத்தில் மொபட்டுகள் திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 மொபட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News