செய்திகள்

ஒரத்தநாடு அருகே வீட்டின் ஓட்டை பிரித்து 6 பவுன் நகை திருட்டு

Published On 2018-10-15 15:56 GMT   |   Update On 2018-10-15 15:56 GMT
வீட்டின் ஓட்டை பிரித்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தொடர்பாக போலீசில் விசாரணை செய்து வருகின்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜரெத்தினம் மனைவி தேவசுந்தரி (வயது54). ராஜரெத்தினம் ஏற்கனவே இறந்துவிட்டார். தேவசுந்தரியின் மகன் மற்றும் மகள் வெளியூர்களில் உள்ளனர். இதனால் தேவசுந்தரி மட்டும் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலை தேவசுந்தரி வீட்டை பூட்டிவிட்டு 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு மதியம் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்தன.மேலும் தேவசுந்தரி வீட்டிற்குள் பெட்டியில் வைத்திருந்த 6 பவுன் நகைகளை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரிந்து உள்ளே இறங்கி 6 பவுன் நகைகளை திருடி சென்றுவிட்டதாக தேவசுந்தரி ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News