செய்திகள்

66 அடியை தொட்ட வைகை அணை - 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2018-10-15 02:32 GMT   |   Update On 2018-10-15 02:32 GMT
வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக 66 அடியை எட்டியிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #VaigaiDam
தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது வைகை அணை. நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது.

இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது. இந்த நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியிருக்கிறது.



இதையடுத்து, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #VaigaiDam

Tags:    

Similar News