செய்திகள்

கண்டோன்மெண்ட் பகுதியில் நாளை மின்தடை

Published On 2018-10-14 14:59 GMT   |   Update On 2018-10-14 14:59 GMT
கண்டோன்மெண்ட் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி:

திருச்சி கோர்ட்டு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி வில்லியம்ஸ் ரோடு, புராமினேட் ரோடு, வார்னர்ஸ் ரோடு, கண்டோன்மெண்ட் பகுதிகள், வயலூர் ரோடு, வண்ணாரப்பேட்டை, குமரன் நகர், சீனிவாசன் நகர், பீமநகர், ராஜா காலனி, சின்னசாமி நகர், 

ஆழ்வார்தோப்பு, காஜாதோப்பு, கே.எம்.நகர், கிருஷ்ணன் கோவில், மாரியம்மன் கோவில், ஹீபர் ரோடு, உழவர்சந்தை, பட்டாபிராமன் ரோடு, புத்தூர், பாரதிநகர், அரசு மருத்துவமனை, புத்தூர் ஆபீசர்ஸ் காலனி, பிஷப் ஹீபர் கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. 

மேற்கண்ட தகவலை தென்னூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜேந்திரவிஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News