மதுரை அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை
மதுரை:
மதுரை மாவட்டம் திருவிளான்பட்டி அன்னை மீனாட்சி நகரைச் சேர்ந்த ராகவன் மனைவி பேபி சசிகலா (வயது 49). இவர் சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு அலங்காநல்லூரில் இருக்கும் மகள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 47 கிராம் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய பேபி சசிகலா, வீடு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் நகை, பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இதுகுறித்து பேபி சசிகலா அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளார். பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.