செய்திகள்
மதுரை அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், பாஸ்போர்ட்டு திருட்டு
மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரையில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டுகளை திருடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அனுப்பானடி வாஞ்சி நாதன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது45). இவர் நேற்று மதியம் தனது நண்பர் ரமேஷ், அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோருடன் காரில் கீழவெளிவீதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் காரின் இருக்கையில் இருந்த பையில் இருந்து ரூ.20 ஆயிரம், 2 மலேசிய பாஸ்போர்ட்டுகள், டிரைவிங் லைசென்சு ஆகியவற்றை மர்ம நபர் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து விளக்குத் தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரில் திருடிய நபரை தேடி வருகிறார்கள்.