செய்திகள்

தொப்பூர் அருகே மினி டெம்போ வேன் கவிழ்ந்து வாலிபர் பலி

Published On 2018-10-13 12:08 GMT   |   Update On 2018-10-13 12:08 GMT
தொப்பூர் அருகே மினி டெம்போ வேன் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில் வாலிபர் பலியானார்.
தருமபுரி:

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மினிடெம்போ வேன் டிரைவர். இவர் நேற்று தக்காளி லோடு ஏற்றிக் கொண்டு மினி டெம்போ வேனை பெங்களூருவுக்கு கொண்டு சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 16) என்பவரும் உடன் வந்தார். அப்போது வண்டி தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மோதி எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி கவிழ்ந்தது. 

இந்த விபத்தில் காயம் அடைந்த ராஜேந்திரனையும், சுபாஷையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சுபாஷை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபாஷ் இறந்தார். 

ராஜேந்திரன் தொடர்ந்து தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News