செய்திகள்

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-10-13 11:58 GMT   |   Update On 2018-10-13 11:58 GMT
குடும்ப தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்  மொள்ளனூர் பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 55). இவர் வெளிநாட்டில் கூலிவேலை செய்து வந்தார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்தார். இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த தஸ்தகீர் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து குருசீலாபட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தஸ்தகீருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
Tags:    

Similar News