செய்திகள்
மாதவரத்தில் வீட்டில் இருந்த நகை-பணம் கொள்ளை
மாதவரத்தில் முனுசாமி நகரில் வசித்து வரும் ரவி நாராயணன் என்பவருடைய வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
மாதவரம் பொன்னியம்மன் மேடு முனுசாமி நகரில் வசித்து வருபவர் ரவி நாராயணன். இவர் வீட்டினை பூட்டி விட்டு அருகில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஒரு வெள்ளி குத்து விளக்கு திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்கள் பூட்டை உடைக்காமல் கள்ளச்சாவி மூலம் திறந்து உள்ளே சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாதவரம் பொன்னியம்மன் மேடு முனுசாமி நகரில் வசித்து வருபவர் ரவி நாராயணன். இவர் வீட்டினை பூட்டி விட்டு அருகில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது வீட்டில் இருந்த 24 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஒரு வெள்ளி குத்து விளக்கு திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்கள் பூட்டை உடைக்காமல் கள்ளச்சாவி மூலம் திறந்து உள்ளே சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.