செய்திகள்
செக்கானூரணியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
செக்கானூரணியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற வழிப்பறி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், வடபழஞ்சியைச் சேர்ந்தவர் மூணாண்டி. இவரது மனைவி சமுத்திரா வள்ளி (வயது 43), சம்பவத்தன்று தனது சகோதரருடன் சமுத்திரா வள்ளி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
செக்கானூரணி புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சமுத்திராவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.
இதுகுறித்து செக்கானூரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.