செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து - 9-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2018-10-07 16:37 GMT   |   Update On 2018-10-07 16:37 GMT
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 9-ம் வகுப்பு மாணவன் பலியானார்.
தென்காசி:

தென்காசியை அடுத்த இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருடைய மகன் சிவசக்தி என்ற சிவா (வயது 14). இவன் அந்த பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று சிவா தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் காமராஜர் நகருக்கு சென்றான்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேஷ்வரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. அந்த சமயத்தில் அந்த பகுதியில் வந்த கார் சிவா மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவன் பலத்த காயமடைந்தான். முருகேஷ்வரியும் காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிவாவை மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News