செய்திகள்

புழல் சிறையில் பிரியாணி தயாரிக்கும் கைதிகள் - புதிய வீடியோ வெளியானது

Published On 2018-10-05 06:28 GMT   |   Update On 2018-10-05 06:28 GMT
சென்னை புழல் சிறைச்சாலையில் கைதிகள் தங்கள் அறையில் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PuzhalJail
சென்னை:

சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, டிவி, கட்டில், ரேடியோக்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



இந்நிலையில், புழல் சிறையின் கைதிகள் அறையில் பிரியாணி தயாராகும் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், கைதிகள் அறையில் தொலைக்காட்சி, டைனிங் டேபிள் உள்ளிட்ட வசதிகள் இருப்பதும் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதும், நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #PuzhalJail

Tags:    

Similar News