செய்திகள்
தண்டராம்பட்டு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
தண்டராம்பட்டு அருகே உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகே உள்ள வாழவச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). விவசாயி. கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராமசாமி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து வாணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.