செய்திகள்
குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள உட்கோட்டை கிராமம் முதலியார் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 32). இவரது மனைவி ரேவதி (27). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக ரேவதி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரேவதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ரேவதியின் தந்தை அண்ணாதுரை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரேவதிக்கு திருமணமாகி 20 மாதமே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி விசாரணை நடத்தி வருகின்றார்.
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள உட்கோட்டை கிராமம் முதலியார் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 32). இவரது மனைவி ரேவதி (27). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக ரேவதி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரேவதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ரேவதியின் தந்தை அண்ணாதுரை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரேவதிக்கு திருமணமாகி 20 மாதமே ஆவதால் உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி விசாரணை நடத்தி வருகின்றார்.