செய்திகள்

பெட்ரோல் விலை 19 காசுகள் உயர்வு

Published On 2018-10-02 08:43 GMT   |   Update On 2018-10-02 08:43 GMT
சென்னையில் பெட்ரோல் விலையை 19 காசாகவும், டீசல் விலையை 24 காசுகளாகவும் லிட்டருக்கு எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. #FuelPrice
சென்னை:

பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணமாய் இருக்கிறது.

சர்வதேச கச்சா எண்ணை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணை உற்பத்தி சற்று குறைந்ததாலும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருவதாலும் இந்த விலை உயர்வு இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்தது. சென்னையில் பெட்ரோல் விலையை 19 காசாகவும், டீசல் விலையை 24 காசுகளாகவும் லிட்டருக்கு எண்ணை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

நேற்று பெட்ரோல் விலை ரூ. 87.05 ஆக இருந்தது. இன்று லிட்டருக்கு ரூ. 87.24 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ரூ. 79.40 ஆக இருந்த டீசல் விலை இன்று ரூ. 79.64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையின் இந்த தொடர் உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். #FuelPrice
Tags:    

Similar News