செய்திகள்

நாமக்கல் அருகே 9 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு - பொதுமக்கள் அவதி

Published On 2018-10-01 16:22 GMT   |   Update On 2018-10-01 16:22 GMT
நாமக்கல் அருகே 9 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள வீசாணம், மரூர்பட்டி, ராசாகவுண்டனூர், செங்காளி கவுண்டனூர், கொண்டம்பட்டி, செம்பாறைபுதூர், கரடிப்பட்டி, பொட்டணம், செல்லிப்பாளையம் ஆகிய 9 கிராமங்களுக்கு மின்சாரம் செல்லும் மின்பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் மின்வாரிய ஊழியர்கள் பழுதை சரிசெய்து, மின் வினியோகத்தை சீரமைத்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மீண்டும் 9 கிராமங்களுக்கும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் நேற்று மின்பாதையில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து, மீண்டும் மின்சாரம் வழங்கினர். இதுபோன்ற பிரச்சினை அடிக்கடி ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
Tags:    

Similar News