செய்திகள்

கோவையில் குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2018-10-01 09:35 GMT   |   Update On 2018-10-01 09:35 GMT
கோவையில் குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை:

கோவை ராம் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவரது மனைவி பிரியா(22). இவர்களது மகன் சைலேஷ்(3). பிரியா கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 27- ந் தேதி தனது கணவரிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு குழந்தையுடன் சென்றார்.

ஆனால் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் பிரியாவை தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து கார்த்திக் காட்டூர் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன தனது மனைவியையும், மகனையும் கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News