செய்திகள்

விருதுநகர் அருகே டீக்கடைக்காரரை தாக்கி நகை பறிப்பு

Published On 2018-10-01 08:44 GMT   |   Update On 2018-10-01 08:44 GMT
டீக்கடைக்காரரை தாக்கி நகையை பறித்துச் சென்றது தொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் லட்சுமியா புரத்தைச் சேர்ந்தவர் ராஜூ (வயது 62). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவரது கடைக்கு 2 பேர் டீக்குடிக்க வந்தனர். அவர்கள் டீக்குடித்தபின் ராஜூவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ராஜூவை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.

இதுகுறித்து ராஜூ எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் அடைப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், நகைப் பறிப்பு தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த 2 பேரை பிடித்து விசாணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News