செய்திகள்

பர்கூர் அருகே மோட்டார்சைக்கிள் மோதி ஜவுளி வியாபாரி பலி

Published On 2018-09-30 18:52 GMT   |   Update On 2018-09-30 18:52 GMT
பர்கூர் அருகே நடந்து சென்ற ஜவுளி வியாபாரி மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பர்கூர்:

பர்கூர் அருகே உள்ள பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 51). ஜவுளி வியாபாரி. இவர் அதே பகுதில் கிருஷ்ணகிரி - பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் மாங்காய் மண்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முருகன் நேற்று முன்தினம் இறந்தார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். 
Tags:    

Similar News