செய்திகள்

திருவையாறில் கல்லூரி மாணவி மாயம்

Published On 2018-09-29 14:23 GMT   |   Update On 2018-09-29 14:23 GMT
திருவையாறில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
திருவையாறு:

திருவையாறு அடுத்த திங்களூர் தெற்குதெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகள் வினோதினி (வயது 20). இவர் திருவையாறில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 25-ம் தேதி கல்லூரிக்கு வந்தவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நேற்று திருவையாறு போலீசில் வெங்கடாசலம் புகார் செய்தார். 

அதன்பேரில் திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி வினோதினியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News