செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே மனைவி-மாமியாரை தாக்கிய வாலிபர் கைது

Published On 2018-09-29 11:02 GMT   |   Update On 2018-09-29 11:02 GMT
ஆண்டிப்பட்டி அருகே மனைவி, மாமியாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு தேவராஜன் நகரை சேர்ந்தவர் குமரேசன் மனைவி அபிராமி(வயது29). இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் அபிராமி கோவித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சம்பவத்தன்று குமரேசன் மற்றும் நாகராஜ் ஆகியோர் அபிராமியிடம் சென்று தகராறு செய்தனர். மேலும் அவரை தகாத வார்த்தையில் திட்டி தாக்கினர். இதை தடுக்கவந்த அபிராமியின் தாயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குபதிவு செய்து குமரேசன் மற்றும் அவரது நண்பர் நாகராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News