செய்திகள்

திடீர் வெள்ளப்பெருக்கு - கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

Published On 2018-09-29 10:06 GMT   |   Update On 2018-09-29 10:06 GMT
கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானலில் மழை பெய்யும் போது கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்தனர். தடைவிதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Tags:    

Similar News