செய்திகள்

திருச்சியில் வீட்டு பூட்டை உடைத்து நகை- பொருட்கள் கொள்ளை

Published On 2018-09-26 12:53 GMT   |   Update On 2018-09-26 12:53 GMT
திருச்சி உறையூர் மருதாண்டாக்குறிச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை- பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திருச்சி:

திருச்சி உறையூர் மருதாண்டாக்குறிச்சி சந்தோஷ் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லதா(வயது 48). இவர்கள் சம்பவதன்று வீட்டை பூட்டி விட்டு தனது மகன் வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பினர். அப்போது வீட்டின்கதவு பூட்டு  உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.   

மேலும் வீட்டில் இருந்த எல்.இ.டி. டி.வி, ஹோம் தியேட்டர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து உறையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகை-பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
Tags:    

Similar News