செய்திகள்

மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்பு தானம் - 3 பேருக்கு மறுவாழ்வு

Published On 2018-09-26 12:19 GMT   |   Update On 2018-09-26 12:19 GMT
மூளைச்சாவு அடைந்த ஈரோட்டை சேர்ந்த பெண்ணின் உடல் உறுப்பு தானமாக வழங்கியதால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
கோவை:

ஈரோடு மாவட்டம், பெத்தாம் பாளையத்தில் வசித்து வருபவர் முத்துசாமி. இவரது மனைவி இந்திராணி (வயது 50) இவர் கடந்த15-ந் தேதி ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தார். உடனடியாக கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திராணி உடல் உறுப்புகளை தானம் செய்ய கணவர் முத்துச்சாமி முன் வந்தார். இந்திராணி சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல், ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுநீரகங்கள் கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், வழங்கப்பட்டது.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர். நல்லா ஜி பழனிசாமி கூறுகையில் மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய இந்திராணி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Tags:    

Similar News