செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி- லாரி டிரைவர் கைது

Published On 2018-09-24 17:15 GMT   |   Update On 2018-09-24 17:15 GMT
ஓமலூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
காடையாம்பட்டி:

ஓமலூரை அடுத்த மோட்டூர் பச்சனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்(56). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். நேற்று இவர் சொந்த வேலை காரணமாக பூசாரிபட்டி வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஓமலூர் திரும்பினார். அக்போது பூசாரிபட்டி சரபங்கா ஆற்று பாலம் அருகே செல்லும் போது  தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி இவர் மீது மோதியது. 

இதில் இவர் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். 

இந்த விபத்து குறித்து தீவட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து சிவகங்கை மாவட்டம், உதயவயலை சேர்ந்த டிரைவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News