செய்திகள்

பரமத்தி அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் கைது

Published On 2018-09-24 16:40 GMT   |   Update On 2018-09-24 16:40 GMT
பரமத்தி அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

பரமத்தி பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அந்த மாணவியை பரமத்தி வேலூரைச் சேர்ந்த 18 வயது வாலிபர் கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர் பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவி மற்றும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
Tags:    

Similar News