செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை கத்தியால் குத்தி பணம் கொள்ளை

Published On 2018-09-23 13:28 GMT   |   Update On 2018-09-23 13:28 GMT
விவசாயியை கத்தியால் குத்தி பணத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நாயகன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. சம்பவத்தன்று தனது தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத 4 பேர் கத்தியால் பழனிசாமியை குத்திவிட்டு வீட்டிலிருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

காயமடைந்த பழனிசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய திருச்சி துவரங்குறிச்சி சேர்ந்த சித்திரவேல், இடையகோட்டை மேடம் பகுதியை சேர்ந்த சக்திவேல், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News