செய்திகள்

திருவோணம் அருகே மதுபானம் விற்றவர் கைது

Published On 2018-09-22 11:19 GMT   |   Update On 2018-09-22 11:19 GMT
திருவோணம் அருகே மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

திருவோணம்:

திருவோணம் அருகே உள்ள சின்னம்மன்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ் (வயது 60). இவர் இப்பகுதியில் மதுபானங்ளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை திருவோணம் போலீசார் இப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மது விற்று கொண்டிருந்த தன்ராஜை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களையும், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக திருவோணம் சப்- இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது, திருவோணம் பகுதியில் மதுபானம் பதுக்கி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News