செய்திகள்
கும்பகோணம் அருகே பள்ளி மாணவி மாயம்
கும்பகோணம் அருகே டி.வி.பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கவரத் தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரி (வயது 13). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 17-ந்தேதி யோகேஸ்வரி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அன்று இரவு முழுவதும் யோகேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் யோகேஸ்வரி கிடைக்கவில்லை.
இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீசில் யோகேஸ்வரி பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.