செய்திகள்

சேலம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

Published On 2018-09-16 12:20 GMT   |   Update On 2018-09-16 12:20 GMT
சேலம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொண்டலாம்பட்டி:

சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி, அய்யன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் சேலம் டவுன் பகுதியில் உள்ள ஒரு பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடை உரிமையாளரிடம் தனது சம்பளத்தை கேட்டார். அதற்கு கடையில் இருந்த செல்போன் காணவில்லை. அதை நீதான் எடுத்திருப்பாய். எனவே உனக்கு சம்பளம் தர முடியாது எனக் கூறி 3 பேர் சேர்ந்து அவரை தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வீராணம், நேரு நகரை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (வயது 33), வீராணம் மூர்த்தி (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்றொருவரான ஆந்திரா ரமேஷ் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News