செய்திகள்

எச் ராஜா மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் - டி.ஜெயக்குமார்

Published On 2018-09-16 05:07 GMT   |   Update On 2018-09-16 05:07 GMT
ஐகோர்ட் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய பாஜக தலைவர் எச் ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #HRaja #Jayakumar
சென்னை:

புதுக்கோட்டையில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, சென்னை ஐகோர்ட் குறித்து கீழ்தரமாக பேசியது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “எச் ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
Tags:    

Similar News