செய்திகள்

கயத்தாறு அருகே கார் விபத்தில் பெண் பலி

Published On 2018-09-15 13:03 GMT   |   Update On 2018-09-15 13:03 GMT
நடந்து சென்ற பெண் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி நான்குவழிச் சாலையில் நேற்று இரவு சுமார் 36 வயது மதிக்கத்தக்க பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அந்த பெண் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். பலியான பெண் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. 

இது குறித்து போலீசார் காரை ஓட்டி வந்த பாளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாணிக்கம் என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News