செய்திகள்

கொரடாச்சேரி அருகே விவசாயியை தாக்கிய தந்தை- மகன் கைது

Published On 2018-09-15 09:59 GMT   |   Update On 2018-09-15 09:59 GMT
கொரடாச்சேரி அருகே விவசாயியை தாக்கிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்:

கொரடாச்சேரி அருகே உள்ள சிட்டிலிங்கம் பகுதியைச் சேர்ந்வர் முருகன் (வயது 47). விவசாயி.

இவர் ரேசன் அரிசியை வாங்கி அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் காளிதாஸ் என்பவரிடம் கொடுத்துள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக முருகனுக்கும் காளிதாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காளிதாஸ், அவரது தந்தை நடராஜன் ஆகிய இருவரும் முருகனை தாக்கியுள்ளனர்.

இதுபற்றி முருகன் கொரடாச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து விவசாயியை தாக்கிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News